Saturday 31 October 2015

பேச்சாற்றலின் முகவரிகள்

பேச்சாற்றலின் முகவரிகள்
மு.நதியா, பத்தாம் வகுப்பு

ஐ.உஷா, எட்டாம் வகுப்பு
வீ.பூவரசி, ஏழாம் வகுப்பு

தொடருது வெற்றி

மக்கள் கருத்தொளி இயக்கம் சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளுக்கான 'என்னாலும் முடியும்' பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கிய எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள்





















கலைக்கழகப் போட்டிகளில் வெற்றி

கலைக்கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள்






பேரிடர் மேலாண்மை

மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அவர்களின் தலைமையில் எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற  பேரிடர் மேலாண்மை  நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு


















Monday 19 October 2015

ஆசிரியர் பொன்மொழிகள்

ஆசிரியர் பொன்மொழிகள்



1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் 
 கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்
 பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்ஸôண்டர்

 2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; 
 போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். - கதே

 3. வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள். 
 - ஷேக்ஸ்பியர்

 4. தாயின் முகம்தான் குழந்தையின் முதல் 
 பாடப் புத்தகம். - காந்தியடிகள்

 5. கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் 
 செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். 
 - ஜிக்ஜேக்ளர்

 6. சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு 
 கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் 
 உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். 
 - வில்லியம் ஆல்பர்ட்

 7. இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர். - கார்லைல்

 8. சிறந்த ஆசிரியருக்குக் கற்பனைத் திறன் உண்டு. அவர்கள் மாணவர்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிகளையும் பின்பற்றுவார்கள். 
 - பெர்ஷியா ஆக்ஸ்டெட்

 -தொகுப்பு: த.சீ.பாலு, சென்னை. [நன்றி: தினமணி]

தமிழ் வளர்த்த சான்றோர்!

தமிழ் வளர்த்த சான்றோர்!


கம்பராமாயணம்


நூல் குறிப்பு:

  • கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது.
  • இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதையை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.
  • கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது.
  • கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர்.
  • கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் முழுவதும் மிளிர்கிறது. “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுற்றாறே” என்று ஒரு கணக்கீடும் உள்ளது.
  • தமிழ் இலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்ச நிலையை அடைந்தது.
  • கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது. அவை பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரண்யகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம்.
  • ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் ஒட்டக்க்கூத்தர் எழுதினார்.

சுந்தரகாண்டம்:

  • இக்காண்டாமே “காப்பியத்தின் மணிமகுடமாக” விளங்குகிறது.
  • சிறிய திருவடி = அனுமன்
  • அனுமனுக்கு “சுந்தரன்” என்னும் பெயரும் உண்டு.
  • இராமனின் அடையாளமாக சீதையிடம் அனுமன் கொடுத்தது = கணையாழி
  • சீதை அனுமனிடம் கொடுத்தது = சூடாமணி

சொற்பொருள்:

கழல் – திருவடிமுளரி – தாமரை
தையல் – திருமகளாகிய சீதாப்பிராட்டிஇறைஞ்சி – வணங்கி
திண்டிறல் – பேராற்றல் மிக்க இராமன்ஓதி – கூந்தல்
மற்று – மேலும்துறத்தி – கைவிடுக
திரை – அலைமருகி – மருமகள்
தனயை – மகள்தடந்தோள் – அகன்ற தோள்
உம்பி – உன் தம்பிவேலை – கடல்
கனகம் – பொன்சாலை – பர்ணசாலை
அலங்கல் – மாலைகோரல் – கொல்லுதல்
திருக்கம் – வஞ்சனைமுறிவு – வேறுபாடு
வீங்கினள் – பூரித்தாள்ஆழி – மோதிரம்
தோகை – மயில்மாமணிக்கரசு – சூடாமணி

இலக்கணக்குறிப்பு:

மொய்கழல் – வினைத்தொகைகழல் – தானியாகு பெயர்
தழீஇ – சொல்லிசை அளபெடைதெண்டிரை – பண்புத்தொகை
அலைகடல் – வினைத்தொகைதுறத்தி – ஏவல் வினைமுற்று
தடந்தோள் – உரிச்சொற்றொடர்பெருந்தவம் – பண்புத்தொகை
இற்பிறப்பு – ஏழாம் வேற்றுமைத்தொகைகளிநடம் – வினைத்தொகை
கண்ணின் நீர்க்கடல் – உருவகம்கோறல் – தொழிற்பெயர்
ஆருயிர் – பண்புத்தொகைபொன்னடி – உவமத்தொகை
பேர்அடையாளம் – உம்மைத்தொகைமலரடி – உவமத்தொகை
மாமணி – உரிச்சொற்றொடர்கைத்தலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை

தேம்பாவணி

நூல் குறிப்பு;

  • வீரமாமுனிவர் இயற்றியது தேம்பாவணி.
  • இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.
  • தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.
  • தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.
  • நூலின் தலைவன் = இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.
  • இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்பர்.

வீரமாமுனிவர்:

  • இயற் பெயர் = கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி
  • கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள்.
  • இவர் தம் பெயரை “தைரியநாதசாமி” என மாற்றிக்கொண்டார்.
  • தமிழ்ச் சான்றோர் இவரை “வீரமாமுனிவர்” என அழைத்தனர்.
  • 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில இயற்கை எய்தினார்.
  • படைப்புகள் = திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
  • திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்:

  • காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர் தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றை கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும்.
  • யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது.
  • அதன் நேரிய மொழி பெயர்பே தமிழில் வளன் ஆகும்.

கதை சுருக்கம்:

  • யூதேயா நாட்டு மன்னன் சவுல்.
  • பிலித்தையர் என்பார் திருமறையை பழித்தும் கடுவுளை இகழ்ந்தும் வந்தனர்.
  • அரக்கன் கோலியாத் இச்ரேயால் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான்.
  • தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனை கொன்றான்.

சொற்பொருள்:

மாலி – சூரியன்ஆலி – மலை நீர்
கரிந்து – கருகிபுடை – இடையின் ஒருபக்கம்
வியன்வட்டம் – அகன்ற கேடயம்கீண்டு – கிழித்து
கிளர்ப – நிறையதொழும்பர் – அடிமைகள்
ஓகையால் – களிப்பினால்வெருவி – அஞ்சி
கதத்த – சினமிக்ககல்நெடுங்குவடு – மலைச்சிகரம்
நிரூபன் – அரசன்விளி – சாவு
கைவயம் – தோள்வலிமைமெய்வயம் – உடல் வலிமை
ஐஞ்சிலை – ஐந்து கற்கள்ஓதை – ஓசை
மருகி – சுழன்றுமிடல் – வலிமை
செல் – மேகம்நுதல் – நெற்றி
உருமு – இடிமருங்கு – இடுப்பு
சிரம் – தலைஅசனி – இடி

இலக்கணக்குறிப்பு:

கதுவிடா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்அகல்முகில் – வினைத்தொகை
கருமுகில் – பண்புத்தொகைகூடினர் – வினையாலணையும் பெயர்
கதத்த – குறிப்பு பெயரெச்சம்கேட்டனர் – வினையாலணையும் பெயர்
தொடர்ந்தனன் நகைப்பான் – முற்றெச்சம்அஞ்சினர் - வினையாலணையும் பெயர்
கேட்ட வாசகம் – பெயரெச்சம்கைவயம் – ஆறாம் வேற்றுமைத் தொகை
அறிய ஆண்மை – குறிப்புப் பெயரெச்சம்இருந்த பாலன் – பெயரெச்சம்
கருமுகில் – பண்புத்தொகைவைவேல் – உரிச்சொற்றொடர்
காண்கிலர் – எதிர்மறை வினைமுற்றுநாமவேல் – உரிச்சொற்றொடர்
                            

பாண்டியன் பரிசு

ஆசிரியர் குறிப்பு:

  • பாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் பிறந்தவர்.
  • இயற்பெயர் = சுப்புரத்தினம்
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள்
  • தமிழாசிரியராக பணிபுரிந்தவர்.
  • இவர் புரட்சிக் கவிஞர் என்றும், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ் என்றும் அழைக்கப்படுபவர்.
  • இவரின் பிசிராந்தையார் நாடகம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.
  • இவரின் “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்னும் பாடல் தற்பொழுது புதுவை அரசின் தமிழ் தாய் வாழ்த்தாக உள்ளது.

கதை:

  • கதிர் நாட்டு மன்னன் கதிரைவேலன்.
  • அவன் மனைவி கண்ணுக்கிணியாள், இவர்களின் ஒரே மகள் அன்னம்.
  • கண்ணுக்கிணியாள் அண்ணனும் படைத்தளபதியும் ஆன நரிக்கண்ணன் சூழ்ச்சியால் நிகழ்ந்த வேழ நாட்டு படையெடுப்பில் அரசனும் அரசியும் இறந்தனர்.
  • பாண்டிய மன்னன் பரிசாக வழங்கிய உடைவாளும் மணிமுடியும் கொள்ளை அடிக்க விரும்பினான் நரிக்கண்ணன்.
  • பேழையை தவறுதலாக வீரப்பனிடம் கொடுத்துவிடுகிறான் நரிக்கண்ணன்.
  • பேழையை கொண்டு வந்து தருபவர்களுக்கு அன்னம் மாலையிடுவாள் என் அறிவிக்கப்பட்டது.
  • அரசியின் தோழி ஆத்தாக்கிழவி. இவள் அன்னத்தின் செவிலித்தாய்.
  • ஆத்தாக்கிழவியின் மகன் வேலன்.
  • ஆத்தாக்கிழவியின் கணவன் வீரப்பன்.
  • அன்னத்தின் தோழி நீலி

சொற்பொருள்:

  • மின் – மின்னல்
  • குறடு – அரண்மனை முற்றம்
  • பதடி – பதர்
  • பேழை – பெட்டி

இலக்கணக்குறிப்பு:

  • என்மகள் – நான்காம் வேற்றுமைத்தொகை
  • காத்தார் – வினையாலணையும் பெயர்
  • விலகாத – எதிர்மறை பெயரெச்சம்
  • ஈன்ற தந்தை – பெயரெச்சம்
  • இழந்த பரிசு – பெயரெச்சம்

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியம்:

  • பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்பது பொருள்.
  • சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறுவது பாட்டியல் நூல்கள்.
  • பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்ட நூலாகும்.
  • வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் 96 வகை எனக் கூறப்பட்டுள்ளது.

இராசராச சோழன் உலா

உலா:

  • உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள்.
  • தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
  • இது கலிவென்பாவால் இயற்றப்படும்.
  • இதில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
  • உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன உலாவின் பின்னிலை எனப்படும்.
  • ஏழு பருவப் பெண்களின் வயது = பேதை(5-7), பெதும்பை(8-11), மங்கை(12-13), மடந்தை(14-19), அரிவை(20-25), தெரிவை(26-32), பேரிளம்பெண்(33-40).

ஒட்டக்கூத்தர்:

  • இராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
  • இவர், “கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்” என்றெல்லாம் புகழப்படுவார்.
  • இவர், விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு இருந்தவர்.
  • இம்மூவரைப் பற்றி ஒட்டக்க்கூத்தர் பாடியதே, “மூவருலா”
  • இவரின் இயற் பெயர் = கூத்தர்
  • ஓட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்க்கூத்தர் எனப்பட்டார்.

சொற்பொருள்:

சூளிகை – நிலாமுற்றம்சாளரம் – பலகணி
தெற்றி – திண்ணைபாங்கரும் – பக்கத்தில் உள்ள இடங்கள்
பிணங்கி – நெருங்கிமறுகு – தெரு
கோடி – வளைந்துசதகோடி – நூறுகோடி
மகோததி – கடல்உதியர் – சேரர்
சரதம் – வாய்மைபவித்ரம் – தூய்மை
மூவெழுகால் – 21 தலைமுறைஅவனி – நாடு
பெருமாள் – அரசர்கூடல் – காவிரிப்பூம்பட்டினம்

இலக்கணக்குறிப்பு:

வாயிலும் மாளிகையும் – எண்ணும்மைஎம்மருங்கும் – முற்றும்மை
மாடமும் ஆடரங்கும் – எண்ணும்மைசெய்குன்று – வினைத்தொகை
ஆடரங்கு – வினைத்தொகைசுற்றிய பாங்கர் – பெயரெச்சம்
மயங்கி, வணங்கி – வினையெச்சம்செற்ற சிலை – பெயரெச்சம்
காணீர் – ஏவல் வினைமுற்றுவிட்டவள் – பெயரெச்சம்
மதயெறிது - இரண்டாம் வேற்றுமைத்தொகைமுத்து முரசம் – பண்புத்தொகை
ஓங்கியுயர் – ஒருபொருட்பன்மொழிஉயரண்டம் – வினைத்தொகை

திருவேங்கடத்தந்தாதி

அந்தாதி:

  • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • அந்தம் = இறுதி, ஆதி = முதல்
  • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
  • இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார்:

  • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
  • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
  • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
  • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

சொற்பொருள்:

  • கழல் – திருவடி
  • பத்தி – ஊர்
  • குஞ்சி – தலைமயிர்
  • போதன் – பிரமன்
  • வாசவன் – இந்திரன்
  • அந்தி – மாலை
  • வேலை – கடல்
  • இருக்கு ஆரணம் – இருக்கு வேதம்
  • கஞ்சம் – தாமரை மலர்
  • அணங்கு – திருமகள்
  • பொழில் – சோலை

இலக்கணக்குறிப்பு:

  • சிற்றன்னை – பண்புத்தொகை
  • தாழ்பிறப்பு – வினைத்தொகை
  • மால் கழல் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கழல் – தானியாகு பெயர்
  • அந்தி காளை – உம்மைத்தொகை
  • வேங்கடம் – வினைத்தொகை
  • மதிவிளக்கு – உருவகம்
  • சேவடி – பண்புத்தொகை
  • இருக்கு ஆரணம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • நற்றாய் – பண்புத்தொகை

மதுரைக் கலம்பகம்

கலம்பகம்:

  • பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையை கலம்பகம் என்பர்.
  • கதம்பம் என்பது கலம்பகம் எனத் திரிந்ததாக உ.வே.சா கூறுவார்.
  • கலம்பகம் 18 உறுப்புகளை உடையது.
  • தமிழின் முதல் கலம்பகம் = நந்திக் கலம்பகம்

குமரகுருபரர்:

  • இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
  • பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தையாக இருந்த இவர் பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளால் பேசினார்.
  • படைப்புகள் = மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர்கலிவெண்பா, காசிக்கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
  • இவரது செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் “இன்னோசை” ஆகும்.

சொற்பொருள்:

  • ஏமவெற்பு – மேருமலை
  • ஏமம் – பொன்
  • மலயாசலம் – பொதிகை மலை

இலக்கணக்குறிப்பு:

  • கயிலாய வெற்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • அசலம் – காரணப்பெயர்
  • முச்சங்கம் – பண்புத்தொகை
  • வளர்கூடல் – வினைத்தொகை
  • மதிப்பிஞ்சு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • இரைதேர் – இரண்டாம் வேற்றுமைத்தொகை

முக்கூடற்பள்ளு

பள்ளு:

  • “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்.
  • பள்ளு 96 வகை சிற்றிலக்கிய வகையுள் ஒன்று.
  • தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கிய வகை “பள்ளு வகை” இலக்கியத்திற்கு பொருந்தும்.

முக்கூடற்பள்ளு:

  • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
  • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
  • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
  • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
  • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.

இலக்கணக்குறிப்பு:

  • வெண்தயிர் – பண்புத்தொகை
  • காய, மாய – பெயரெச்சம்
  • நாழிகை வாரம் – உம்மைத்தொகை
  • தாபதர் உள்ளம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • செந்நெல் – பண்புத்தொகை
  • சுழி வெள்ளம் – வினைத்தொகை

மறுமலர்ச்சிப் பாடல்கள் - மாலைக்கால வருணனை

z

நூல் குறிப்பு:

  • வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரததக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்தார்.
  • பாஞ்சாலிசபதம் என்னும் இந்நூலில் அழைப்புச் சருக்கம் ,சூதாட்டச் சருக்கம், அடிமைச் சுருக்கம், துகிலுரிதற்சருக்கம், சபதச் சருக்கம் ஆகிய ஐந்து சருக்கங்கள் உள்ளன.

பாரதியார்:

  • இவர் 1882ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் = சின்னசாமி, இலக்குமி அம்மையார்.
  • இளமையிலேய கலைமகள் என்னும் பொருள் தரும்,”பாரதி” என்னும் பட்டதை பெற்றார்.
  • இவர் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
  • இவரின் முப்பெரும் படைப்புகள் = கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு.

சொற்பொருள்:

  • பரிதி – சூரியன்
  • வண்ணம் – அழகு
  • முகில் – மேகம்
  • பொய்கை – நீர்நிலை
  • இருட்கடல் – நீலக்கடல்
  • களஞ்சியம் – தொகுப்பு

இலக்கணக்குறிப்பு;

  • படர்முகில் – வினைத்தொகை
  • செழும்பொன் – பண்புத்தொகை
  • தங்கத்தீவு – உருவகம்
  • பொற்கரை – உருவகம்
  • சுடரொளி – வினைத்தொகை

புத்தக சாலை

ஆசிரியர் குறிப்பு:

  • பாரதிதாசன் புதுவையில் 1891ஆம் ஆண்டு பிறந்தார்.
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமி அம்மாள்
  • இயற்பெயர் = சுப்புரத்தினம்
  • படைப்புகள் = குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, இசையமுது, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் போன்ற பல நூல்களை படைத்துள்ளார்.

சொற்பொருள்:

  • மனோபாவம் – உளப்பாங்கு
  • சகமக்கள் – உடன் வாழும் மக்கள்
  • ஒன்று – ஓரினம்
  • இலகுவது – விளங்குவது
  • சுவடி – நூல்
  • சுவடிச்சாலை – நூலகம்
  • சர்வகலாசாலை – பல்கலைக்கழகம்

இலக்கணக்குறிப்பு;

  • அன்புநெறி – இருபெயரொட்டு பண்புத்தொகை
  • உயர்எண்ணம் – வினைத்தொகை
  • செந்தமிழ் – பண்புத்தொகை
  • தருதல், வைத்தல் – தொழிற்பெயர்

காடு

ஆசிரியர் குறிப்பு;

  • வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = அரங்க திருக்காமு, துளசியம்மாள்
  • இயற்பெயர் = அரங்கசாமி என்ற எத்திராசலு
  • இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
  • பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்.
  • இவர், “கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்” என்று அழைக்கப்படுவார்.

சொற்பொருள்:

  • வெய்யோன் – கதிரவன்
  • புரையோடி – உள்ளுக்குள் அரிக்கப்பட்டு
  • முதல் – வேர்
  • செல் – ஒருவகை கரையான்
  • சோங்கி – வாட்டமுற்று

சிக்கனம்

ஆசிரியர் குறிப்பு;

  • இவமை கவிஞர் எனப்போற்றப்படுபவர் கவிஞர் சுரதா
  • இவர் திருவாரூர் மாவட்டம் பழையனூரில் பிறந்தவர்.
  • இயற்பெயர் = இராசகோபாலன்
  • படைப்புகள் = தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்.
  • இவர் தமிழக இயலிசை நாடகமன்றம் வழங்கிய கலைமாமணி பட்டம் பெற்றவர்.
  • இவருடைய “தேன்மழை” நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்றுள்ளது.
  • பாவேந்தர் நினைவு பரிசினை பெற்ற முதல் கவிஞர் இவரே.

சொற்பொருள்;

  • பகட்டு வாழ்க்கை – ஆடம்பரமான வாழ்க்கை
  • செட்டு – சிக்கனம்

இலக்கணக்குறிப்பு:

  • சட்டதிட்டம் – உம்மைத்தொகை
  • நீதிநூல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீரூற்று – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • தீராத – எதிர்மறைப் பெயரெச்சம்

மனித நேயம்

ஆசிரியர் குறிப்பு;

  • கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் 01.06.1942 இல் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = கோபால், மீனாம்பாள்
  • இவரின்”இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசினை பெற்றுள்ளது.

சொற்பொருள்:

  • சிந்தை – உள்ளம்
  • குன்றி – குறைந்து
  • சாந்தி – தெருக்கள் கூடுமிடம்
  • சிறுமை – இழிவு

இலக்கணக்குறிப்பு:

  • சிந்தித்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • கன்றுகுரல் – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தலைகுனிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை

வேலைகளல்ல வேல்விகளே!

ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் தாராபாரதி 26.02.1947இல் திருவண்ணாமலை மாவட்டம் குவளை என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர் = துரைசாமி, புஷ்பம் அம்மாள்
  • இவர் 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி, நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.
  • படைப்புகள் = புதிய விடியல்கள், விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம்.

சொற்பொருள்:

  • மூடத்தனம் – அறியாமை
  • மூலதனம் – முதலீடு

இலக்கணக்குறிப்பு;

  • வெறுங்கை – பண்புத்தொகை
  • விரல்கள் பத்தும் – முற்றும்மை
  • பாறையும் – உயர்வு சிறப்பும்மை
  • மலர்ச்சோலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  • கங்கையும் சிந்துவும் – எண்ணும்மை
  • தெற்கு வடக்காய் – முரண்தொடை
  • மாவிலி – உரிச்சொற்றொடர்

தீக்குச்சிகள்

ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் அப்துல் ரகுமான் 1937இல் மதுரையில் பிறந்தவர்.
  • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்.
  • படைப்புகள் = பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை.
  • தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்.

இலக்கணக்குறிப்பு:

  • புல்நுனி – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கண்ணீர் வெள்ளம், பசிக்கயிறு – உருவகம்
  • மெல்லிய காம்பு – உருவகம்

    வழிப்பாட்டுப் பாடல்கள் - சிவபெருமான்

    சுந்தரர்:

    • சுந்தரர் தேவாரம் பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
    • சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் பிறந்தவர்.
    • பெற்றோர் = சடையனார், இசை ஞானியார்.
    • இயற்பெயர் = நம்பிஆரூரர்
    • இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்.
    • சிவபெருமான் இவரைத் தம் தோழராகத் கொண்டமையால் “தம்பிரான் தோழர்” என அழைக்கப்பட்டார்.
    • இவர் எழுதிய திருதொண்டதொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.

    சொற்பொருள்:

    • காமகோபன் – காமனைக் காய்ந்தவன்
    • ஆவணம் – அடிமையோலை

    இலக்கணக்குறிப்பு:

    • கண்ணுதல் – இலக்கணப் போலி
    • பழ ஆவணம் – பண்புத்தொகை
    • சொற்பதம் – ஒருபொருட் பன்மொழி

    திருமால்

    குலசேகர ஆழ்வார்:

    • ஆழ்வார் என்னும் சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில் ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர்.
    • குலசேகர ஆழ்வார் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
    • இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
    • அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
    • ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை என்பார் உரை எழுதியுள்ளார்.
    • திருவாய்மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பார் எழுதிய ஈடு என்னும் பேருரை ஆழமும் அகலமும் உடையதாகும்.

    சொற்பொருள்:

    • ஆனாத – குறைவு படாத
    • அரம்பையர்கள் – தேவமாதர்கள்

    புத்தர் பிரான்

    ஆசிரியர் குறிப்பு:

    • மணிமேகலை நூலின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.
    • இவரைத்  “தண்டமிழ் ஆசான்” எனப் புகழ்வர்.
    • இவரின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
    • மணிமேகலை புத்த சமய காப்பியம்.
    • இந்நூலுக்கு “மணிமேகலைத் துறவு” என்னும் வேறு பெயரும் உண்டு.
    • இந்நூல் இந்திர விழவூரெடுத்த காதை முதலாகப் பவதிரம் அறுகெனப்பாவை நோற்ற காதை ஈறாக முப்பது காதைகளை உடையது.

    சொற்பொருள்:

    • தீர்த்தன் – தூயன்
    • புராணன் – மிகப்பழையன்
    • ஏமம் – பாதுகாப்பு
    • ஆரம் – சக்கரக்கால்
    • கடிந்தேன் – துறந்தேன்

    இலக்கணக்குறிப்பு:

    • தீநெறி – பண்புத்தொகை
    • கடும்பகை – பண்புத்தொகை
    • உணர்ந்த முதல்வன் – பெயரெச்சம்

    அருகன்

    நூல் குறிப்பு:

    • அருகதேவனை பற்றி கூறியுள்ள இந்நூல் நீலகேசியாகும்.
    • சீவக சிந்தாமணிக்கு  நிகராக கவிதைச் சுவைமிக்க இந்நூலை எழுதியவர் விவரம் தெரியவில்லை.
    • இந்நூல் “நீலகேசித் தெருட்டு” என்றும் அழைக்கப்படும்.

    சொற்பொருள்:

    • சாமரை – சாமரம் ஆகிய வெண்கவரி
    • புடைபுடை – இருமருங்கினும்
    • இயக்கர் – கந்தருவர்
    • இரட்ட – அசைக்க
    • சிங்காசனம் – அரியணை
    • ஆசனம் – இருக்கை
    • ஒளிமண்டிலம் – ஆலோகம்
    • நிழற்ற – ஒளிர
    • சந்திராதித்தம் – முத்துக்குடை
    • சகலபாசனம் – பொற்குடை
    • நித்தவிநோதம் – மணிக்குடை

    இயேசு பெருமான்

    ஆசிரியர் குறிப்பு:

    • இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம்.
    • ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்.
    • ஜான் பனியன் என்பார் எழுதிய பில்க்ரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலினையே இரட்சணிய யாத்திரிகம் என படைத்துள்ளார்.
    • எச்.ஏ.கிருடினப்பிள்ளை திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் ஊரினர்.
    • பெற்றோர் = சங்கர நாராயணபிள்ளை, தெய்வநாயகி அம்மை
    • படைப்புகள் = இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல்.
    • இவரை “கிறித்துவ கம்பர்” என்பர்.

    சொற்பொருள்:

    • கண்ணி – மரியன்னை
    • காசினி – உலகம்
    • வான்கதி – துறக்கம்
    • மருவ – அடைய

    இலக்கணக்குறிப்பு:

    • கண்ணிபாலன் – நான்காம் வேற்றுமைத்தொகை

    நபிகள் நாயகம்

    உமறுப்புலவர்:

    • உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்னும் ஊரினர்.
    • தந்தை = செய்கு முகமது அலியார் என்னும் சேகு முதலியார்
    • கடிகை முத்துப் புலவரின் மாணவர் இவர்.
    • இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
    • சீறாப்புராணம் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதினார்.
    • நூல் நூற்றும் முன்னரே சீதக்காதி இறந்ததால் அபுல் காசிம் என்பார் உதவியுடன் எழுதி முடிக்கப்பட்டது.
    • பானு அஹமது மரைக்காயர் என்பவரே நூலை முழுவதும் எழுதி முடித்தார். அது “சின்னச் சீறா” எனப்பட்டது.
    • உமறுப்புலவர் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.

    சொற்பொருள்:

    • பொறி – ஒளிப்பிழம்பு
    • வடிவார் – வடிவினையுடையார்
    • நவியார் – நபிகள் நாயகம்

    இலக்கணக்குறிப்பு:

    • மெய்ப்பொருள் – இருபெயரொட்டு பண்புத்தொகை
    • சுவர்க்கபதி - இருபெயரொட்டு பண்புத்தொகை