Thursday 10 November 2016

500,1000 ரூபாய் நோட்டுகள்


1. நவம்பர் 9-ம் தேதி அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

2.
நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் .டி.எம் செயல்படாது.

3.
நீங்கள் கையில் வைத்திருக்கும் ரூபாய் 500, 1000 நோட்டுகளை உங்கள் வங்கி அல்லது தபால் நிலையம் சேமிப்புக் கணக்கில் வைப்பு வைதிருக்க வேண்டும்.

4.
வங்கியிலிருந்து நீங்கள் ஒரு நாளைக்கு 10000 ரூபாய் அல்லது ஒரு வாரத்திற்கு 20,000 தான் எடுக்க முடியும்.

5.
காசோலைகள், வரைவோலைகளை, டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகள் மற்றும் மின்னணு நிதி பரிவர்த்தனைகளுக்கு எந்த தடையும் இல்லை.

அடுத்த 72 மணிநேரங்களுக்கு கீழ்கண்ட இடங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்த முடியும் :

1.
ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர்கள், பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் பெற தற்போதைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப்    பயன்படுத்தலாம்.

2.
அரசு மருத்துவமனைகளில் பில் தொகைக்கு செலுத்த முடியும்.

3.
மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட  பெட்ரோலிய நிறுவனங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில் செலுத்த முடியும்.

4.  
மத்திய மற்றும் மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளில் செலுத்த முடியும்.

5.  
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பால் பூத்களில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.