Friday 28 August 2015

சமூக அறிவியல் - பொது அறிவுக் களஞ்சியம்

தொகுப்பு: வீ.ராஜீவ்காந்தி, பட்டதாரி ஆசிரியர்
எண் வினா விடை
1.பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது?நிலப்பகுதிகள்
2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின? பெருங்கடல்கள் 
3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன? விண்துகள் 
4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது? சிந்து 
5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின? நெபுலா 
6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது? சமூக வாழ்க்கை 
7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது? தர்ம சாஸ்திரம் 
8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு? ஆண் மகவு வேண்டி 
9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள் எதனை உணர்த்துகின்றன? சாதி நிலை இல்லாத சமுதாயம் 
10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது? சமண, புத்த 
11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது? தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல் 
12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன? விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு 
13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன? வாழ்க்கை 
14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது? சாதி முறை 
15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன? புத்த மற்றும் சமண சமயம் 
16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது? ஆங்கிலேயர் ஆட்சியில் 
17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன? சாலைகள் 
18. அடையாள அட்டை வெளியிட்டவர் மற்றும் விவசாயிகளுக்கு கடன் அளித்தவர் யார்? முகமது பின் துக்ளக் 
19. உளவுத்துறையை ஏற்படுத்தியவர் யார்? பிரோஷ்ஷா துக்ளக் 
20. நிலப்பகுதி உயரமாகவும், மேல்பகுதி தட்டையாகவும் இருந்தால் அது ________ எனப்படும்? பீடபூமி